ஜனாதிபதி 89 அரச நிறுவனங்களை தன்வசப்படுத்தினார்!
நாட்டில் அமைச்சுக்கள் சிலவற்றின் கீழ் இயங்கிய 89 நிறுவனங்கள் ஜனாதிபதியின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கான விசேட வர்த்தமானி ntspயிடப்பட்டுள்ளது.
20வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அதில் உள்ள ஜனாதிபதி அமைச்சுக்களை வகிக்க முடியும் அதேபோன்று நிறுவனங்களை தன்வசப்படுத்திக் கொள்ள முடியும் என்ற ஏற்பாடுக்கு அமைய இந்த வர்த்தமானி ntspயிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய இரண்டு புதிய அமைச்சுகள் ஜனாதிபதியினால் வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய இலங்கையில் அமைச்சரவை அமைச்சர் களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.
இதேநேரம் மேலும் சில அமைச்சுகளின் விடயதானங்களிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கான ஜனாதிபதி செயலணி செயற்படவுள்ளது.
இதுவரையில் ஜனாதிபதி செயலகத்தின் கீழிருந்து இலங் கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக் குழு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள் சிறி லங்கா ரெலிகொம் மற்றும் அதன் நிர்வாக நிறுவனங்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளன.
இதேவேளை இதுவரையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் கீழிருந்த காவல்துறை திணைக்களம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் கீழிருந்த சிவில் பாது காப்பு திணைக்களம் என்பன புதிய வர்த்தமானி அறி வித்தலின் பிரகாரம் உருவாக்கப்பட்டுள்ள புதிய அமைச் சான பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.